அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எலந்தங்குடி இணையதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Sunday, December 20, 2009

செய்தி

எலந்தங்குடி கிராமத்தில் ஐ.ஓ.பி., வங்கி உள்ளது. இந்த ஊரிலிருந்து அதிகம் பேர் வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்துவருவதால், இவ்வங்கியில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 1 மணிக்கு மர்ம நபர்கள் சிலர் வங்கியின் முன் கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று மெயின் கதவை திறக்க முயன்றுள்ளனர். மர்ம நபர்கள் கதவை தொட்டதும் பாதுகாப்பு அலாரம் ஒலித்துள்ளது. அந்த சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், வங்கியை நோக்கி ஓடிவந்துள்ளனர். அதை பார்த்த மர்ம நபர்கள், மக்களிடம் சிக்காமல் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். வங்கி மேலாளர் செல்லதுரை அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நன்றி. தினமலர் நாள் டிசம்பர் 20,2009,

Friday, November 13, 2009

அதிசயம்

வஞ்சிரமீனின் நினைவாற்றல்

 

  இடம்விட்டு இடம் பெயர்ந்து செல்வது பறவைகளுக்கு மாத்திரம் உள்ள தனித்தன்மை என்று நீங்கள் கருதியிருந்தால், அது தவறாகும். உண்மையில் தரையில் மாத்திரம் அல்லாது கடலில் வாழும் உயிரினங்களும் இடம் விட்டு இடம் பெயரும் தன்மை கொண்டவை. இந்த அத்தியாயத்தில் இடம்விட்டு இடம் பெயரும் மீனினமான வஞ்சிர மீனின் துணிகரச் செயல் பற்றி ஆய்வு செய்வோம்.

வஞ்சிரமீனும் மற்ற மீனினங்களைப் போன்று ஆறுகளில் பெண்மீன்கள் இடும் முட்டையிலிருந்தே தோன்றுகின்றன. தோன்றிய நாளிலிருந்து சில வாரங்கள் மட்டுமே ஆறுகளில் வாழும் இந்த மீனினம், சில வாரங்களுக்குப்பின் ஆறு சென்று கலக்கும் கடலை நோக்கி தனது பயணத்தைத் துவக்குகிறது. கடலை நோக்கிச் செல்லும் இந்த பயணத்தின் போது வஞ்சிர மீன்கள் ஏராளமான ஆபத்தை எதிர்கொள்கின்றன. மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளையும், நீர்த்தேக்கங்களையும், மாசுபட்ட தண்ணீரையும், வஞ்சிர மீன்களை உணவாக உட்கொள்ளக்கூடிய பெரிய பெரிய மீன்களால் ஏற்படும் அபாயங்களையும் கடந்து வஞ்சிர மீன்கள் கடலை சென்று அடைகின்றன. பல ஆபத்துகளை கடந்து கடலை அடைந்த வஞ்சிர மீன்கள், கடலிலேயே பல ஆண்டுகள் உயிர்வாழ்கின்றன. வஞ்சிர மீன்கள் தங்களது சந்ததியை பெருக்கக்கூடிய பருவத்தை அடைந்தவுடன், கடலிலிருந்து அவைகள் முதலில் புறப்பட்டு வந்த ஆற்றை நோக்கி மீண்டும் நீந்தத் துவங்குகின்றன.

இதில் வியக்கத்தக்க செய்தி என்னவெனில் வஞ்சிர மீன்கள் தாங்கள் பிறந்து சில வாரங்களே வாழ்ந்த இடத்தை தவறாமல் சென்றடைவதுதான். இந்த செயலில் அவைகள் சிறிதும் தவறிழைப்பதில்லை. அவைகள் பயணித்த தூரம் ஒன்றும் குறைந்தது அல்ல. வஞ்சிர மீன்கள் தாங்கள் புறப்பட்டு வந்த இடத்தை சென்றடைய வேண்டுமெனில், சிலவேளைகளில் 1500 கிலோ மீட்டர் (930 மைல்கள்) தூரத்தைக் கடக்க வேண்டும். 1500 கிலோ மீட்டர் தூரத்தையும் கடந்து செல்ல சில மாதங்கள் கூட ஆகலாம். இந்த பயணத்தில் வஞ்சிரமீன்கள் பல தடைகளை கடந்து செல்ல வேண்டியதாக இருப்பினும் அவைகள் சிறிதும் தவறிழைக்காமல் தாங்கள் புறப்பட்டு வந்த இடத்தைச் சென்றடைகின்றன.

இந்த மீன்கள் சந்திக்கக்கூடிய முதல் மற்றும் முக்கியமான பிரச்னை என்னவெனில் பல ஆறுகள் ஒரே இடத்தில் கலக்கும் இடமாக கடல் இருப்பதால் வஞ்சிர மீன்கள் கடந்து வந்த ஆறு, கடலில் சென்று கலக்கும் இடத்தை சரியாக கண்டுபிடித்தாக வேண்டும். இதன் அடிப்படையில்தான் தாங்கள் திரும்பிச் செல்ல வேண்டிய பாதையை வஞ்சிரமீன்கள் தீர்மானிக்க வேண்டும். எந்த ஒரு வஞ்சிரமீனும் இந்த செயலில் ஒருபோதும் தவறிழைப்பதில்லை. முதன் முறையாக அவைகள் தாங்கள் புறப்பட்டு வந்த இடத்திற்கு திரும்ப வேண்டும் என்று தீர்மானித்த உடனேயே, தாங்கள் நீந்தி வந்த ஆற்றை நாமெல்லாம் ஆச்சரியப்படும் வகையில் அடையாளம் கண்டுகொள்கின்றன.

அவைகள் திரும்பி செல்ல வேண்டிய ஆற்றில் புகும் வஞ்சிர மீன்கள், ஆற்றின் எதிர் நீரோட்டத்தில் மிக வேகமாக நீந்த ஆரம்பிக்கின்றன. வஞ்சிர மீன்கள் முதலில் ஆற்றிலிருந்து கடலுக்கு இடம்பெயரும்போது, ஆறுகளின் நீரோட்டப்பாதையிலேயே நீந்தி வருவதால், அவைகள் மிக எளிதாக கடலை சென்றடைந்திருக்கும். ஆனால் அவைகள் கடலிலிருந்து ஆற்றை நோக்கி நீந்த ஆரம்பிக்கும் போது, நீரோட்டத்திற்கு எதிர்த்திசையில் நீந்த வேண்டியதிருக்கும். இவ்வாறு அவைகள் எதிர்த்திசையில் நீந்திச் செல்லும்போது சில இடங்களில் உயரமான அருவிகளைக் கூட தாண்டிச் செல்கின்றன. (பார்க்க படம்). இந்த பயணத்தில் வஞ்சிரமீன்கள் இன்னும் ஏராளமான ஆபத்துக்களை கடந்து செல்ல வேண்டியதிருக்கிறது. ஆறுகளில் ஆழமில்லாத பகுதிகளில் மீன்களை உணவாக உட்கொள்ளும் பறவைகளும், கரடிகளும் மற்ற விலங்கினங்களும் நிறைந்திருப்பதால், அவைகளிடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள வஞ்சிர மீன்கள் இதுபோன்ற ஆழமில்லாத இடங்களை கடந்து செல்லும்போது, தனது மேல் துடுப்பு தண்ணீருக்கு மேலே, வெளியில் தெரியும்படி நீந்திச் செல்கிறது.

வஞ்சிரமீன்கள் எதிர்கொள்ளும் கடினமான பயணம் இத்துடன் முடிந்துவிடவில்லை. ஏனெனில் அவைகள் நீந்திச் செல்லும் ஆறுகள் பல கிளைகளாக பிரியும் இடங்களில், தான் பிறந்து வளர்ந்த இடம் உள்ள கிளையை நினைவில் கொண்டு, அதனை சரியாக கண்டுபிடிக்க வேண்டும். இந்தத் தேர்ந்தெடுப்பில் எந்த ஒரு வஞ்சிரமீனும் ஒருபோதும் தவறிழைப்பதில்லை. அவைகள் தாங்கள் சென்றடைய வேண்டிய ஓடையை சரியாக சென்றடைகின்றன.

இப்போது நாம் நம்மையே உதாரணமாக எடுத்துக் கொள்வோம். ஒரு கிராமத்தில் ஒரு வீட்டில் பிறந்து சில காலம் மாத்திரமே இருந்துவிட்டு, நம்முடைய கிராமத்தை விட்டு 1500 கிலோ மீட்டர் தூரமுள்ள மற்றொரு நகரத்திற்குச் சென்று விடுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். பல வருடங்கள் கடந்து நாம் நம்முடைய பிறந்த கிராமத்திற்கு செல்ல எண்ணுகிறோம். பல வருடங்களுக்கு முன்னால் நீங்கள் கடந்து வந்த தெருக்களையும், ஊரையும் உங்களால் நினைவில் கொள்ள முடியும் என்று எண்ணுகிறீர்களா? கண்டிப்பாக முடியாது. ஆறறிவு படைத்து மனிதர்களால் முடியாத ஒரு செயலை, ஐந்தறிவு கொண்ட மீனினம் சிறிதும் தவறின்றி செய்வது முற்றிலும் வியக்கத்தக்க செயல் அல்லவா?

இந்த வகை மீனினங்கள் தாங்கள் பிறந்து சிறிது காலம் வாழ்ந்த இடங்களை எப்படி அடையாளம் கண்டு கொள்கின்றன என்பது பற்றி பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த வகை மீனினம் தாங்கள் பிறந்து சிறிது காலமே வாழ்ந்த இடங்களை, தங்களுக்குள்ள 'அதீத மோப்ப சக்தியால்' கண்டு கொள்கின்றன என ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஒரு வேட்டைநாயையும் எஞ்சும் வகையில் வஞ்சிரமீன்கள் ஓடும் தண்ணீரில் கூட (வேட்டை நாய்களுக்கு ஓடும் தண்ணீரில் மோப்பம் பிடிக்கும் சக்தி கிடையாது) மோப்பம் பிடிக்கக்கூடிய வகையில் எல்லாம் வல்ல அல்லாஹ் மீன்களுக்கு அளித்திருக்கும் கூர்மையான மூக்கிற்கு அவைகள் நன்றி செலுத்த வேண்டும். ஓடும் தண்ணீரின் ஒவ்வொன்றும் வித்தியாசமான வாசனையைக் கொண்டிருக்கும். ஆற்றிலிருந்து கடலுக்குச் செல்லும் வேளையில் சிறிய வஞ்சிர மீன்கள் இந்த வித்தியாசமான வாசனைகள் அனைத்தையும் தனது நினைவில் பதிவு செய்து கொள்கிறது. ஓடும் தண்ணீரின் வித்தியாசமான வாசனைகள் அனைத்தையும் கடலிலிருந்து ஆற்றுக்குள் செல்லும் வேளையில் மீண்டும் நினைவு கூர்ந்து தனது பிறந்த இடம் திரும்பி வருகிறது இந்த வஞ்சிர மீன்கள்.

வழக்கத்திற்கு மாற்றமான இந்த செயல் எப்படி நடைபெறுகிறது? ஒவ்வொரு வஞ்சிர மீனும் தான் பிறந்து சிறிது காலமே வாழ்ந்த இடத்தை சரியாக எப்படி கண்டுபிடிக்கிறது? தனது உயிருக்கு ஏற்படும் ஆபத்துகளையும் பொருட்படுத்தாமல், உயரத்திலிருந்து விழும் நீர்வீழ்ச்சிகளையும், தனது எதிரிகளான மற்ற விலங்கினங்களையும் எதிர்த்து, வஞ்சிர மீன் தான் பிறந்து சிறிது காலமே வாழ்ந்த இடத்தை சென்றடைய வேண்டிய காரணமென்ன? வஞ்சிர மீன்கள் இவை எவற்றையும் தனது சொந்த நலனுக்காக செய்யவில்லை. சுருக்கமாகச் சொல்வதென்றால் தங்களது முட்டைகளை தாங்கள் பிறந்து சிறிது காலம் வாழ்ந்த தண்ணீரில் இட்டு வைக்கவே இங்கு வருகின்றன.

வஞ்சிர மீன்கள் செய்யும் இந்த செயல்கள் பற்றிய கேள்விகளுக்கெல்லாம் ஒரே ஒரு பதில்தான் உண்டு. எல்லாம் அறிந்த வல்ல அல்லாஹ்வே வஞ்சிர மீன்கள் தாங்கள் பிறந்து சிறிது காலமே வாழ்ந்த இடங்களை கண்டு பிடிக்கும் சிறந்த நினைவாற்றலையும், அதற்குத் தேவையான ஏனைய அமைப்புகளையும் வழங்கினான். ஏனைய படைப்புகளைப் போன்று வஞ்சிர மீன்களும் வல்ல அல்லாஹ் இட்ட கட்டளைப்படி - அல்லாஹ்வின் படைப்பாற்றலை உலகிற்கு எடுத்துக் காட்டுகின்றன.

இந்த எடுத்துக்காட்டு, பரிணாம வளர்ச்சிக் கொள்கை முற்றிலும் தவறு என்பதை நிரூபிப்பதோடு, வஞ்சிரமீன்கள் தங்களது சந்ததியைப் பெருக்குவதற்காக தங்களது உயிரையும் பணயம் வைக்க தயங்குவதில்லை என்பதையும் நமக்குத் தெரிவிக்கிறது.

எல்லா உயிரினங்களும் தாங்கள் உயிர்வாழ்வதற்காக ஒன்றோடொன்று போராட்டம் நடத்துகிறது எனவும், பலம் கொண்ட உயிரினம் மட்டும் போராட்டத்தின் கடைசியில் வெற்றி பெற்று உயிர்வாழும் எனவும் 'பரிணாம வளர்ச்சிக் கொள்கை' க் காரர்கள் பறைசாற்றுகிறார்கள். ஆனால் பரிணாம வளர்ச்சிக் கொள்கைக்காரர்களின் பிடிவாதமான கொள்கைக்கு முற்றிலும் மாற்றமாக, இங்கு உயிரினங்கள் ஒன்றுக்கு ஒன்று உறுதுணையாக இருப்பதை நாம் பார்க்கிறோம். விலங்கினங்கள் தங்கள் சந்ததிகளை உருவாக்குவதற்காக தங்களது உயிரையும் பணயம் வைப்பதை மேற்கண்ட ஆய்விலிருந்து நாம் தெரிந்து கொண்டோம். நாம் இதுவரை கண்ட ஆய்வுகளிலிருந்து, வேறு வேறு இனத்தைச் சார்ந்த வௌ;வேறு விலங்கினங்கள் ஒன்றுக்கு ஒன்று உறுதுணையாக இருப்பதை நாம் அறிந்து கொண்டோம். தன்னுடைய வாரிசுகளுக்காக தனது உயிரையும் பணயம் வைக்கும் வஞ்சிர மீனினம் - தன்னுயிர் போக்கத் துணியும் விலங்கினங்களில் ஒரே ஒரு உதாரணம்தான். இவ்வாறு ஆபத்துக்கள் பலவற்றைக் கடந்து தான் பிறந்து சில காலமே வாழ்ந்த இடங்களை அடையும் வஞ்சிர மீனினம், தனது வாரிசுகளை உருவாக்கும் முட்டைகளை இட்டதும், மரணமடைகின்றன. இருப்பினும் மரணத்திற்கு அஞ்சி அவைகள் தங்கள் பயணத்தை விட்டுவிடுவதில்லை. இவ்வாறு தனது வாரிசுகளுக்காக தன்னுயிர் கொடுக்கவும் தயாராக இருக்கும் விலங்கினங்களைப் பற்றி பரிணாம வளர்ச்சிக் கொள்கையால் எந்தவிதத்திலும் விளக்கமளிக்க முடியாது. இந்த உண்மை ஒன்றே அல்லாஹ் இருக்கின்றான் என்பதற்கு போதுமான அத்தாட்சியாகும்.

எல்லாம் அறிந்த வல்ல அல்லாஹ்வே வஞ்சிர மீன்கள் தாங்கள் பிறந்து சிறிது காலமே வாழ்ந்த இடங்களை கண்டு பிடிக்கும் சிறந்த நினைவாற்றலையும், அதற்குத் தேவையான மற்ற அமைப்புகளையும் வழங்கினான். ஏனைய படைப்புகளைப் போன்று வஞ்சிர மீன்களும் வல்ல அல்லாஹ் இட்ட கட்டளைப்படி - அவனது படைப்பாற்றலை உலகிற்கு எடுத்துக் காட்டுகின்றன. ஆறறிவு படைத்த மனிதர்கள், ஐந்தறிவு படைத்த இதுபோன்ற உயிரினங்களிலிருந்து பாடம் பெற வேண்டும். இது பற்றி அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் குறிப்பிடுகிறான்:

எந்த உயிர்ப் பிராணியாயினும் அதன் முன் நெற்றி உரோமத்தை அவன் (அல்லாஹ்) பிடித்தவனாகவே இருக்கின்றான்..:' (அத்தியாயம் 11 ஸூரத்துல் ஹூது - 56வது வசனத்தின் ஒரு பகுதி).

மேலும் வல்ல அல்லாஹ் குறிப்பிடுகிறான்:

'இன்னும், உணவளிக்க அல்;லாஹ்; பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை, மேலும் அவை வாழும் (இருக்கும்) இடத்தையும், அவை (மடிந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான். இவையனைத்தும் (லவ்ஹுல் மஹ்பூள் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவாகி) இருக்கின்றன.' (அத்தியாயம் 11 - ஸுரத்துல் ஹூது - வின் 6வது வசனம்)

Chennai Airport Expansion Project


Chennai Airport Expansion Project includes :* New Integrated Terminal* Development of Kamraj Domestic Terminal* Expansion of existing Anna International Terminal & * Face lifting of existing Terminals at Chennai Airport* Multilevel car Parks* Addition/Expansion of RunwaysPhase 1 Consist of construction of 72,700 Sq. M of three level of Domestic/International Terminal with 104,000 Sq. M of Multilevel car Park for 2600 cars. Simultaneously modification and expansion of 64,300 Sq. M of International terminal with 52,000 Sq. M Multilevel car park.The project thread is placed under ' Aviation and Airports' section of the India sub-forum.

Thursday, November 12, 2009

FAVORITE FOODS OF PROPHET[SAW]...

> > Vinegar> > A food Prophet Muhammad (SAW) used to eat with olive oil. [That's now a fashion in expensive Italian Restaurants], help to reduce cholesterol and BP, clean the> > nervous system.
> > Milk> > The Prophet (SAW) said that milk wipes away heat from the heart just as the finger wipes away sweat from the brow. It strengthens the back, improved th brain, renews vision and drives away forgetfulness.
> > Honey> > Considered to be the best remedy for diarrhoea when mixed in hot water. It is the food of foods, drink of drinks and drug of drugs. It is used for creating appetite, strengthening the stomach, eliminating phlegm; as a meat preservative,hair conditioner, eye salve and mouthwash. It is extremely beneficial in the morning in warm water and is also a Sunnah.
> > Olive oil> > Excellent treatment for skin and hair, delays old age, and treats inflammation of the stomach. Also help to reduce BP.
> > Mushroom> > The Prophet (SAW) said that mushroom is a good cure for the eyes, it also serves as a form of birth control and arrests paralysis.
> > Grapes> > The Prophet (SAW) was very fond of grapes - it purifies the blood, provides vigour and health, strengthens the kidneys and clears the bowels.
> > Dates> > The Prophet (SAW) said that a house without dates has no food - also to be eaten at the time of childbirth.
> > Figs> > It is a fruit from paradise and a cure for piles.
> > Barley> > Good for fever in a soup form.
> > Melon> > The Prophet (SAW) said: "None of your women who are pregnant and eat of water melon will fail to produce off spring who are good in countenance and good in character".
> > Pomegranate> > The Prophet (SAW) said it cleanses you of Satan and evil aspirations for 40 days.
> > Water> > The Prophet (SAW) said the best drink in this world and the next iswater, when you are thirsty drink it by sips and not gulps, gulping produces sickness of the liver.
> > So praise be to our beloved Nabi (SAW) who related us with marvelous knowledge which dazzles the wisest minds. May this information be beneficial to all of us Insha'Allah.

தேர்வில் வெற்றி பெறும் வழிகள்

ஆண்டுத் தேர்வுகளும், பொதுத் தேர்வுகளும் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. மாணவர்களும், மாணவிகளும் தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக் கொண்டிருக்கும் நேரம் இது. இத்தருணத்தில் அவர்களுக்கு சில அறிவுரைகள்:
நேரத்தைத் திட்டமிடுங்கள். கால அட்டவணை ஒன்றை உங்களுக்காக தயார் செய்து கொள்ளுங்கள்.

1. தொடர்ந்து ஒரேயடியாக மணிக்கணக்கில் உட்கார்ந்து படிக்க வேண்டாம். இடையிடையே சற்றே ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்(ஒரு 20 நிமிடங்கள்).
எல்லா பாடங்களையும் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு படிக்காதீர்கள்.இடம் மாற்றி மாற்றிப் படித்தால்தான் மனதில் நன்றாகப் பதியும்.
2. தொடர்ந்து ஒரே Subject பாடங்களை படிக்காதீர்கள். ஒரு Subject-ல் ஒரு பாடம் படித்ததும் வேறு Subject-ல் உள்ள பாடங்களை எடுத்துப் படியுங்கள்.
பாடங்களைப் புரிந்து படியுங்கள்.மனப்பாடம் செய்ய வேண்டிய பகுதிகளை மட்டும் மனப்பாடம் செய்து கொள்ளலாம்.
3. பாடங்களை மீண்டும் மீண்டும் படிப்பது –Revision பார்ப்பது அவசியம். Revision தேர்வுகளை அலட்சியம் செய்யாதீர்கள்.
4. ஆசிரியர் திருத்திக் கொடுக்கும் உங்கள் விடைத்தாள்களை திரும்பவும் பார்வையிடுங்கள்.நீங்கள் செய்த தவறுகள் விளங்கும். அந்தத் தவறுகளை நீங்கள் மீண்டும் செய்ய மாட்டீர்கள்.
5. ஒரு பாடத்தை படித்து முடித்ததும் புத்தகத்தை மூடி வைத்து விட்டு படித்ததை மனதுக்குள் அசை போடுங்கள். இது அவசியம். படித்ததை நினைவுக்கு கொண்டு வருதல் ஒரு சிறந்த திறமை ஆகும்.
படித்த பாடங்களை எழுதிப் பார்ப்பதும் அவசியம்.
6. குறிப்பாக கணக்குப் பாடங்களை எழுதிப் பார்த்துதான் படித்திட வேண்டும்.
கணக்குப் பாடங்களில் வரும் (Formula) சூத்திரங்களை ஒரு பேப்பரில் ஸ்கெட்ச் பெண் கொண்டு எழுதி சுவரில் மாட்டி வைத்து தினமும் இரு தடவை அதைப் பார்வையிடுங்கள்.
7. நன்றாகப் படிக்கும் மாணவர்களின் நட்பு அவசியம்.
சினிமா, டீவி, கிரிக்கெட் போன்ற உங்களைப் படிப்பிலிருந்து திசை திருப்பும் விஷயங்களை ஒத்திப் போட்டு விடுங்கள்.
8. உணர்ச்சி வசப்படாதீர்கள். கோபம் வேண்டாம். பதற்றம் வேண்டாம். இவை உங்களின் நினைவாற்றலை அதிகம் பாதிக்கும்.
இரவு அதிக நேரம் கண் விழித்துப் படிப்பதைவிட அதிகாலையில் எழுந்து படிப்பது சிறந்தது.
9. இரவில் குறைந்தது 6 மணி நேரம் அவசியம் தூங்குங்கள். இல்லாவிட்டால் தேர்வு அறையில் தூங்கிவிட வாய்ப்புண்டு.
10. நல்ல சத்துள்ள உணவை சாப்பிடுங்கள். அப்போதுதான் மூளை நன்றாக வேலை செய்யும். நொறுக்குத் தீனிகளை தவிர்க்கவும்.
11. சிறிது உடற்பயிற்சியும் அவசியம்.
12. நன்றாகப் படிப்பவர்கள் மிக அதிக மதிப்பெண்பெற முயற்சி செய்யுங்கள்.
13. சுமாராகப் படிப்பவர்கள் நிச்சயம் நாம் Pass ஆகி விடுவோம் என்ற நம்பிக்கையுடன் படியுங்கள்.
14. கடின உழைப்புக்கு மாற்று கிடையாது என்பதை மனதில் நன்றாக நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள்.
வெற்றி பெற வாழ்த்துக்கள்!

ஹிந்துக்களின் வேதாகமத்தில் சொல்லப்படும், கடைசி அவதாரமான கல்கி

ஹிந்துக்களின் வேதாகமத்தில் சொல்லப்படும், கடைசி அவதாரமான கல்கி, இறைதூதர் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாவார்.இதை நான் சொல்லவில்லை, சமீபத்தில் ஹிந்தி மொழியில் வெளிவந்த புத்தகத்தின் சாராம்சமாகும். இந்த நூல் வெளியானபின், இந்தியாவே ஒரு கலங்கு கலங்கி விட்டது என்றால் மிகையல்ல. இதை ஒரு இஸ்லாமியர் எழுதியிருந்தால், அவர் இந்நேரம் சிறையிலடைக்கப்பட்டிருப்பதோடு, அந்த புத்தகத்தையும் தடை செய்திருப்பார்கள்.ஆனால், கல்கி அவதாரத்தைப் பற்றிய இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு, “பிரபஞ்ச இறைத்தூதின் வழிகாட்டி” என்னும் இந்த புத்தகம், வங்காளத்தில் இருந்து வெளிவந்ததாகும். இது அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் ஒரு முக்கிய அத்தாட்சியாக இருக்கிறது. இதை எழுதியது, தலைசிறந்த ஆய்வாளரான பண்டிட் வைத் ப்ரகாஷ் என்னும், ஒரு பிராமண சமஸ்கிருத பண்டிட்டாவார்.பண்டிட் வைத் ப்ரகாஷ, பன்னெடுங்கால கடின ஆராய்ச்சி மற்றும் அயரா உழைப்பில் உருவான இப்புத்தகத்தை, இதே போல ஆய்வு செய்யும் எட்டு கல்விமான்களிடம் சமர்ப்பித்து இருக்கிறார். அவர்களும், முழுக்க இப்புத்தகத்தை படித்துணர்ந்து, பலமான ஆதாரங்களினால், இப்புத்தகத்தின் தகவல், முழுக்க முழுக்க உண்மை தான் என்று சான்றளித்துள்ளனர்.இந்தியாவின் தலைச்சிறந்த வேதங்கள், குறிப்பிடும் தூதரும் வழிகாட்டியுமான கல்கி அவதாரம், மக்காவில் பிறந்த முஹம்மது என்னும் மாமனிதரே ஆவார். ஆதனால், ஹிந்துக்கள், இனியும் கல்கி அவதாரத்துக்காக காத்திராமல், ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு, இவ்வுலகில் உதித்து, இறைத்தூதை எத்தி வைத்து, வாழ்வின் இறுதிவரை இறைபணியாற்றிய இறைவனின் கடைசி தூதரை ஏற்று இஸ்லாத்தைத் தழுவ வேண்டும். இவரது ஆராய்ச்சியின் இறையாண்மையை நிரூபிக்க, பண்டிட், தம் வேதத்திலிருந்து தக்க சான்றுகளை முன்வைக்கிறார்.1.வேதங்கள், கல்கி அவதாரம் தான், பகவானின் இறுதித் தூதர் என்கிறது. இது, கடைசி தூதர், முஹம்மதுடைய விஷயத்தில் மட்டுமே சரியாக இருக்க முடியும்.2.ஹிந்து வேதங்களின் முன்னறிவிப்பின் படி, கல்கி நீரினால் சூழப்பட்ட ஒரு இடத்தில் தான் அவதாரம் எடுப்பார். அது தான் ‘ஜஸீரத்துல் அரப்’ என்று சொல்லக் கூடிய கடலால் சூழப்பட்ட அரேபிய தீபகற்பமாகும்.3.ஹிந்து புனித நூல்களில், கல்கி அவதாரத்தின் தந்தையை, விஷ்னு பகத் என்றும் தாயை சொமானிப் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சமஸ்கிருதத்தில் விஷ்னு என்றால், இறைவன், அதாவது அல்லாஹ் என்று பொருள். அதோடு, பகத் என்றால் அடிமை என்று அர்த்தம்.ஆக, விஷ்னு பகத் என்பது, அல்லாஹ்வின் அடிமை அதாவது அரபியில், அப்துல்லாஹ் என்னும் பதத்தைத் தருகிறது. சொமானிப் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு, சாந்தமான அமைதி என்று பொருள். அரபியில் ஆமினா என்ற வார்த்தைக்கும் இதே அர்த்தம் தான். ஆக, இறுதித் தூதர் முஹம்மதின் பெற்றோர் அப்துல்லாஹ் மற்றும் ஆமினா என்பது, உறுதிப்படுகிறது.4.அதோடு, கல்கி அவதாரம், ஆலிவ் மற்றும் பேரித்தங்கனிகளை உண்டு வாழ்வார் என்றும், வார்த்தை தவறாத நேர்மையாளராக இருப்பார் என்றும் ஹிந்துக்களின் புத்தகங்களில் உள்ளது. ஆக, இது முஹம்மதின் விஷயத்தில் உண்மையாகிறது என்பதாக பண்டிட் ப்ரகாஷ் எழுதுகிறார்.5.கல்கி அவதாரம் உயர்ந்த மதிப்பு மிக்க குலத்தில் பிறப்பார் என்று வேதங்கள் சொல்கின்றன. இதுவும், மிக உயரிய, மதிப்புமிக்க குறைஷி குலத்தில் பிறந்ததால், முஹம்மதுடைய விஷயத்தில் சரியாகிறது.6.கல்கி அவதாரத்துக்கு, ஒரு குகையில் இறைவனின் ஏவலர் மூலமாக ஞானம் கிடைக்கும் என்பதாக வந்துள்ளது. ஆக, மக்காவிலேயே, அல்லாஹ்வின் தூதர் ஜிப்ரீல் மூலமாக ஹீரா குகையில் ஞானம் பெற்றது முஹம்மது ஒருவர் தான்.7.மேலும், கல்கி அவதாரத்துக்கு காற்றின் வேகத்தில் பறக்கும் குதிரை வழங்கப்படுமென்றும், அதன் மூலம் அவர், இவ்வுலகத்தையும், ஏழு வானத்தையும் சுற்றி வருவார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘மிஃராஜ்’ இரவில், ‘புராக்’ வாகனத்தில் தூதர் முஹம்மது பயணமானது, இதைத்தானே சொல்கிறது?8.அதோடு, கல்கி அவதாரத்துக்கு இறைவனின் உதவி பெருமளவில் இருக்கும் எனவும், இறைவனால் வலுவூட்டப்படுவார் எனவும் புத்தகங்களில் வந்துள்ளது. முஹம்மதுக்கு, பத்ரு போர்க்களத்தில், இறைவனின் உதவி நேரடியாக தன் ஏவலர்கள் மூலம் இறங்கியது நம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான்.9.மேலும் சில விஷயங்கள் வேதங்களில் குறிப்பிடப்படுகின்றன. அதாவது, கல்கி அவதாரம், குதிரையேற்றத்திலும், அம்பெய்துவதிலும், வாள் பயிற்சியிலும் சிறந்து விளங்குவார். இந்த இடத்தில், பண்டிட் வைத் ப்ரகாஷ் என்ன சொல்கிறார் என்பது, அதி முக்கியமான, கவனத்தில் கொள்ளத் தக்க விஷயமாகும். அதாவது, குதிரை, வாள் மற்றும் ஈட்டிகளின் காலம் வெகு நாட்களுக்கு முன்பே போய் விட்டது, தற்போது, நவீன ஆயுதங்களான, துப்பாக்கிகள், பீரங்கிகள், ஏவுகணைகள் என போர்முறை முற்றிலும் மாறி விட்டது. அதனால், வாளுடனும் வில்லுடனும் போராடக்கூடிய கல்கி இனிமேல் அவதாரமெடுப்பார் என்று இனியும் நம்பிக்கொண்டிருப்பது அர்த்தமற்றது. உண்மையில், வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்கி அவதாரம் என்பது, புனித குர்ஆன் வழங்கப்பட்ட தூதர் முஹம்மதேயன்றி வேறில்லை என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.

Tuesday, November 3, 2009

சமுதாய செய்தி







உனது திரையானது எங்கள் கௌரவத்தின் கோட்டையாகும்.
மனித வர்க்கமென்னும் தீபஜோதிக்கு நீதான் வெளிச்சத்தை அளித்து வருகிறாய்...
தீனுடைய ஆவேசம் உனது உயிர்க்குளேதான் உறைந்து கிடக்கிறது.
ஆனால் நவின காலம் தேக சுகத்தையே லட்சியமாகக் கொண்டுள்ளது.
தேகத்தை விற்று விடவும் துணிவு கொண்டுள்ளது.
சூழ்ச்சி நிறைந்த காலமானது விலையுயர்ந்த ஒழுக்கத்தை அப்படியே ஜீரணித்து கொண்டிருக்கிறது.அகப்பார்வை இழந்த பெண்களின் செயல்களில் அச்சமில்லை! கூச்சமில்லை!!
அந்நிய ஆடவர்களுடன் உராய்ந்து பழகுமாறு அறிவிழந்த பெண்களைச் செய்துவிட்டது.
மகளே!காலத்தின் கொள்ளைப்பிடுங்களில் சிக்கி விடாதே!!
கவனமாக ஒதுங்கி வாழ்வாயாக!!!

அறிவியல்


அல்லாஹ்வின் திருப்பெயரால்....

உணவு உட்கொள்ளப்பட்டவுடன், அது இரைப்பைக்கு (Stomach) சென்று பின்னர் குடல்களுக்குச் செல்கிறது. இவற்றில் நாம் உட்கொண்ட உணவுகளின் சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, சக்கைகள் வேறாகவும், சத்துப்பொருட்கள் வேறாகவும் பிரிக்கப்படுகின்றது. இந்த சத்துப்பொருட்கள் குடல்களிலுள்ள இரத்த நாளங்களின் (Blood Vessels of Intestine) வழியாக இரத்த ஓட்டத்தைச் (Blood Circulation) சென்றடைகிறது.

இந்த இரத்த ஓட்டம் நாம் உண்ட உணவின் சத்துப் பொருட்களை உடலின் பல்வேறு பாகங்களுக்கும் எடுத்துச் சென்று அந்த உறுப்புகள் சீராக இயங்குவதற்கு உதவுகிறது உடலில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெயுமா? ஒரு சுழற்சியில் (One Cycle) ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோமீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! - மோட்டார்சைக்கிளின் சராச வேகத்தைவிட அதிகம். * மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி? மாத்திரை சாப்பிட்டவுடன், அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

உடலில் ரத்தம் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்வது என்ன? எல்லாத் திசுக்களும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.

ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன? நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் - டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்துவந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான். இவ்வாறு இரத்த ஓட்டத்தின் மூலம் நம்முடைய உட ற்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் வண்ணம் படைத்த ரப்புல் ஆலமீன் அழகிய முறையில் படைத்துள்ளான்.

இப்படிப்பட்ட இந்த இரத்த ஓட்டம் மனிதனின் உடலில் உள்ளது என்பதை முதன் முதல் கண்டுபிடித்தவர் யார் ? உயிரினங்களின் இரத்த ஓட்டம் பற்றிய அறிவியலை இப்னு நஃபீஸ் என்பவரே முதன்முதலாக கண்டறிந்து கூறினார்.

இது நடந்தது குர்ஆன் இறக்கியருளப்பட்ட 600 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆகும். இவருக்கு 400 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த வில்லியம் ஹார்வி என்பவர் இரத்த ஓட்டம் பற்றிய இந்த அறிவியலை மேலை நாடுகளுக்கும், உலக நாடுகளுக்கும் எடுத்துக்கூறி இதை பிரபல்யப்படுத்தினார். வில் யம் ஹார்வி என்ற அறிவியலாளர் பிறந்த ஆண்டு கி.பி. 1578 ஆகும்.

ஆனால் இதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உடல் இரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது என்ற உண்மைத் தகவலை அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த மனித சமுதாயத்திற்கு எடுத்துரைத்து விட்டார்கள். எப்படித் தெரியுமா?

இதோ இறைத்தூதர் எடுத்தியம்புவதைப் பாருங்கள்.

حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ قَالَ حَدَّثَنِي اللَّيْثُ قَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ صَفِيَّةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَتْهُ ح حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ وَعِنْدَهُ أَزْوَاجُهُ فَرُحْنَ فَقَالَ لِصَفِيَّةَ بِنْتِ حُيَيٍّ لَا تَعْجَلِي حَتَّى أَنْصَرِفَ مَعَكِ وَكَانَ بَيْتُهَا فِي دَارِ أُسَامَةَ فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَهَا فَلَقِيَهُ رَجُلَانِ مِنْ الْأَنْصَارِ فَنَظَرَا إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ أَجَازَا وَقَالَ لَهُمَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَعَالَيَا إِنَّهَا صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ قَالَا سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ قَالَ إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنْ الْإِنْسَانِ مَجْرَى الدَّمِ وَإِنِّي خَشِيتُ أَنْ يُلْقِيَ فِي أَنْفُسِكُمَا شَيْئًا رواه البخاري 2038

ஸஃபிய்யா (ர லி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாச லில் (இஃதிகாஃப்) இருந்தார்கள். அவர்களுடன் அவர்களின் மனைவியரும் இருந்துவிட்டுத் திரும்பினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ”அவசரப்படாதே! நானும் உன்னோடு வருகிறேன்!” என்றார்கள். என் அறை உசாமாவின் வீட்டிற்குள் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் என்னுடன் வெளியே வந்தார்கள். அப்போது, அன்ஸாரிகளைச் சேர்ந்த இருவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, அவர்களைக் கூர்ந்து பார்த்துவிட்டுக் கடந்து சென்றனர். நபி(ஸல்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி, ”இங்கே வாருங்கள்! இவர் (என் மனைவி) ஸஃபிய்யாவே ஆவார்!” எனக் கூறினார்கள். அவ்விருவரும் ”சுப்ஹானல்லாஹ்(அல்லாஹ் தூயவன்) அல்லாஹ்வின் தூதரே!” என்று (வியப்புடன்) கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் இரத்தம் ஓடும் இடங்களிலெல்லாம் ஓடிக் கொண்டிருக்கின்றாரன் உங்கள் உள்ளங்களில் அவன் தவறான எண்ணங்களைப் போட்டுவிடுவான் என நான் அஞ்சினேன்” என்று தெளிவுபடுத்தினார்கள். நூல் : புகாரி (2038)

அல்லாஹ்வின் தூதர் படைத்த இறைவனிடம் இருந்து பெற்று அறிவித்த அற்புதத் தகவலைத்தான் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வந்த வில்லியம் ஹார்வி என்ற அறிஞர் கண்டறிந்தார். வில்லியம் ஹார்வியின் ஆய்விற்கு துணைபுரிந்தது இப்னு நஃபிஸ் என்று முஸ்லிம் அறிஞரின் ஆய்வே ஆகும். முஸ்லிம் அறிஞரின் ஆய்விற்கு அடித்தளமாக அமைந்தது அல்லாஹ்வின் தூதரின் இறையறிவிப்பே என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.

وَيَرَى الَّذِينَ أُوتُوا الْعِلْمَ الَّذِي أُنزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ هُوَ الْحَقَّ وَيَهْدِي إِلَى صِرَاطِ الْعَزِيزِ الْحَمِيدِ(6)34

(முஹம்மதே!) ”உமது இறைவனிட மிருந்து உமக்கு அருளப்பட்டதே உண்மை” என்று கல்வி வழங்கப்பட்டோர் கருதுகின்றனர். மற்றும் புகழுக்குரிய மிகைத்தவனின் வழியை அது காட்டுகிறது. (அல்குர்ஆன் 34 : 6)

rafiudeen

Tuesday, October 27, 2009

செய்தி

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்கானவர் இஸ்லாத்தை தழுவினார்
செவ்வாய்க்கிழமை, 27 அக்டோபர் 2009:
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் உயிர் பிழைத்த அமெரிக்கர் ஒருவர் இஸ்லாத்தை தழுவியுள்ளார். ஆமெரிக்காவில் உள்ள கிரீன்வில்லே என்ற ஊரைச் சேர்ந்த அவரது பெயர் டென்னிஸ் ஒ பிரைன். கத்தோலிக்க கிறிஸ்த்தவரான ஒ பிரைன் சென்ற ஆண்டு வியாபாரம் நிமித்தமாக மும்பை வந்துள்ளார். நட்சத்திர ஒட்டலில் அவர் தங்கியிருந்த போது பயங்கரவாதிகளின் தாக்குதல் நடைபெற்றது. பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது வெறுப்பு கொள்ளாமல் அவர்களது மார்க்கத்தை ஆய்வு செய்ய அவர் முடிவுச் செய்தார். இந்த ஆய்வின் முடிவில் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார்.
சென்ற ஈகைத் திருநாள் அன்று பெருநாள் தொழுகைக்காக குழுமியிருந்த மக்கள் முன்னிலையில் கலிமா (இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொள்வதற்கான பிரமாண வாக்குமூலத்தை) மொழிந்து தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டார்.
வில்மிங்டனில் உள்ள புனித அந்தோனியார் கத்தோலிக்க தேவாலயத்தின் கல்வி குழு தலைவராக ஒபிரைன் சேவையாற்றி வந்தார். தான் இஸ்லாத்தில் இணைந்தது தனக்கே ஆச்சரியம் தரக் கூடிய செயலாக அமைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். ஆனால் தான் இஸ்லாத்தில் இணைந்தது தனக்கு மனநிம்மதியை தருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இஸ்லாத்தை நோக்கிய தனது பயணம் நவம்பர் 26 அன்று இரவு தாஜ் மகால் ஒட்டலின் அறை எண் 343ல் இருந்து தொடங்கியதாக ஒபிரைன் தெரிவித்தார். தானும் தனது நண்பர் ரிச் திபந்தபரும் இரவு உணவை முடித்துக் கொண்டு ஐஸ் கிரீம் சாப்படாமல் தமது அறைகளுக்கு திரும்பிய சற்று நேரத்தில் துப்பாக்கி சப்தம் கேட்டதாக ஒபிரைன் கூறினார். தனது அறைக் கதவு வழியாக பார்த்த போது துப்பாக்கி ஏந்திய மூவர் சப்தமிட்டு கொண்டு செல்வதை தான் கண்டதாக அவர் குறிப்பிட்டார். ஒரு கட்டத்தில் வியட்னாம் போரில் பங்குக் கொண்ட அனுபவம் உள்ள ஒபிரைன் அறையை விட்டு வெளியே வந்து துப்பாக்கி ஏந்தியவர்களை வீழ்த்தி ஆயுதங்களை பறிக்கலாம் என்று எண்ணியதாகவும் ஆனால் பிறகு தனது சிந்தனையை மாற்றிக் கொண்டு கதவை தாழித்துக் கொண்டதாகவும் ஒபிரைன் குறிப்பிட்டார்.
பிறகு தனது அறை புகைமூட்டமாகியதாகவும் அறையை விட்டு வெளியேற எண்ணி கதவை திறந்த போது தீ எரிவதை தான் கண்டதாகவும் பிறகு தீயணைப்பு படையினர் தன்னை காப்பாற்றினர் என்றும் ஒபிரைன் குறிப்பிட்டார்.
தாக்குதலை நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களை பற்றி பிறகு தான் படிக்க தொடங்கியதாகவும் பிறகு திருக்குர்ஆனை படித்ததாகவும் ஒபிரைன் தெரிவித்தார். பிறகு இஸ்லாத்தைப் பற்றி விரிவாக படித்ததாகவும் அது பற்றி பலரிடம் விசாரித்த அறிந்ததாகவும் ஒபிரைன் கூறினார். பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தியவர்கள் இஸ்லாத்தின் கொள்கைகளுக்கேற்ப நடந்துக் கொள்ளவில்லை என்ற தெளிவை இஸ்லாத்தை நோக்கிய தனது பயணத்தின் போது அறிந்துக் கொண்டதாகவும் அவர் கூறினார். தனது முஸ்லிம் நண்பரான அஹ்மது அமீர் தான் இஸ்லாத்தைப் பற்றி அறிய பெரிதும் உதவினார் என்றும் ஒபிரைன் குறிப்பிட்டார்.
ஒபிரைன் இஸ்லாத்தை தழுவிய‌ இந்த விபரம் திலாவரே நியூஸ் என்ற உள்ளூர் பத்திரிகையில் முதலில் வெளியாகியது. தகவல்: தமுமுக இனையதளம்.

Thursday, September 24, 2009

வாழ்த்துகள்

சென்னை: இந்தியாவிலேயே முதல் முறையாக வித்தியாசமான கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை சென்னையில் நடந்துள்ளது. ஒருவரின் கல்லீரலைப் பெற்று அதை இரண்டாகப் பிரித்து இருவருக்குப் பொருத்தி டாக்டர் முகம்மது ரெலா என்ற டாக்டர் பெரும் சாதனை செய்துள்ளார்.

ஹைதராபாத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையின் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைப் பிரிவின் தலைவராக இருப்பவர் டாக்டர் ரெலா. இந்த மருத்துவமனை சென்னை மற்றும் பெங்களூரிலும் கிளைகளைக் கொண்டுள்ளது.

சாதனை அறுவைச் சிகிச்சை குறித்து டாக்டர் ரெலா கூறுகையில், இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு கல்லீரலை இரண்டாகப் பிரித்து இரு நோயாளிகளுக்குப் பயன்படுத்தியிருப்பது இதுவே முதல் முறையாகும். உறுப்பு தானம் செய்தவரின் உடலிலிருந்து இந்த கல்லீரல் பெறப்பட்டது.

உலகம் முழுவதும் கல்லீரல் தானமாக கிடைப்பது மிகவும் குறைவாக உள்ளது. எனவே கிடைத்த கல்லீரலை அதிகபட்சம் பேருக்குப் பயன்படுத்தும் முறை உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ளது. அதேசமயம், இந்தியாவில் இவ்வாறு செய்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

ஒரு கல்லீரலைப் பிரித்து இருவருக்குப் பொருத்துவது நோயாளிகளுக்கு பெரும் வரப் பிரசாதமாக அமையும் என்றார் டாக்டர் ரெலா.

லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி மருத்துவமனை யில் டாக்டர் ரெலா இதுபோன்ற அறுவைச் சிகிச்சையை செய்துள்ளாராம். இந்த தொழில்நுட்பம் ஐரோப்பாவில் உருவானது. கிங்ஸ் மருத்துவமனையில் டாக்டர் ரெலாதான் முதல் முறையாக இதை செய்து அறிமுகப்படுத்தினாராம்.

சேலத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த ஒருவரின் கல்லீரலைத் தானமாக பெற்று அதைப் பிரித்து இரு நோயாளிகளுக்குப் பொருத்தியுள்ளார் டாக்டர் ரெலா.

தானமாக பெறப்பட்ட கல்லீரலை இரு பகுதிகளாகப் பிரித்துள்ளனர். அதில் சிறிய இடதுபுறப் பகுதியை இளம் பெண் ஒருவருக்கும், பொரிய பகுதியை வயதான பெண்மணிக்கும் பொருத்தியுள்ளனர்.

கல்லீரல் பொருத்தப்பட்ட இளம் பெண் , கிரிக்லர் நஜர் சின்ட்ரோம் என்ற அரிய பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர் ஆவார். இதுபோன்ற பிரச்சினை இருந்தால் பிறக்கும்போதே, மஞ்சள் காமாலை நோய் வரும். இந்தப் பிரச்சினையை சரி செய்யாவிட்டால் நரம்பு மண்டலம் முற்றிலும் பாதிக்கப்பட்டு மரணத்தை தழுவ நேரிடும் என்றார் டாக்டர் ரெலா.

இச்செய்தியில் இடம்பெரும் டாக்டர் ரெலா.அவர்கள் கிளியனுர் S.A.மஜித் குடும்பத்தை சேர்ந்தவர்

Wednesday, August 12, 2009

தகவல்

ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகளுக்கு பாஸ்போர்ட் கட்டாயம் தேவை என சவுதி அரசு புதிய உத்தரவு போட்டுள்ளது. இதனால் இதுவரை பாஸ்போர்ட் பெறாதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உரிய பயண ஆவணங்கள் இருப்பவர்களை மட்டுமே ஹஜ் பயணத்திற்கு அனுமதிக்க முடியும் என்று சவுதி அரேபிய அரசு கூறியுள்ளது. இதுவரை ஹஜ் பயணிகள் சிறப்பு பயண அனுமதி பெற்று சவுதி அரேபியாவிற்கு சென்று வந்தனர்.

ஆனால், தற்போது பாஸ்போர்ட் உடன், வைரஸ் காய்ச்சல் தடுப்பு குறித்த சான்றிதழும் அவசியம் என்று அந்த நாட்டு அரசு கோரியுள்ளது.

பல்வேறு மாநில ஹஜ் கமிட்டிகளால் ஹஜ் பயணம் மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்ட ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேரில் 20 ஆயிரம் பேர் மட்டுமே பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்துள்ளனர்.

ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கான சிறப்பு பாஸ்போர்ட் பெறுவதற்கான தேதி ஜூலை 31 ம் தேதியுடன் முடிவடைந்து விட்டபோதிலும், இதுவரை பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்காதவர்கள், உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

அவர்களுக்கு உடனே பாஸ்போர்ட் கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய அரசின் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளத

Monday, July 27, 2009

கல்வி

தமிழக அரசின் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிக ளுக்கு தமிழ்நாடு தொழில் பயிற்சி மையம் இலவச வேலை வாய்ப்பு பயிற்சிகளை வழங்கி வருகிறது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினரைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த இலவசப் பயிற்சி யைப் பெறலாம்.

இந்த மையம், ஆர்.எம். கல்வி அறக்கட்டளை யால் நடத்தப்படுகிறது. செல்போன் சர்வீஸ், சி, சி பிளஸ் பிளஸ், லினக்ஸ், வெப் டிசைனிங், நெட் வொர்க் செக்யூரிட்டி தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படும்.
இப்பயிற்சியில் சேர விரும்புவோர் 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், (அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள்) மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் நேரில் வர வேண்டும்.

18 வயது முதல் 32 வயதுடையவர்கள் இப்பயிற்சியில் சேரலாம். மேலும் விபரங்களுக்கு தமிழ்நாடு தொழில் பயிற்சி மையம், அண்ணா சாலை தபால் தலைமை அலுவலகம் எதிரில், சென்னை. தொலைபேசி எண்கள் : 044 28585230, 28414736, 28527579, 9382266724

Saturday, July 25, 2009

சமுதாய செய்தி

Asalamu alaikum,
TN police selection commission is going to select nearly 3000 police, out of that we muslims have nearly 140 seats(BCM).Happy to see we have reservation on goverment jobs,May Allah give the rewards to the people who strvie to get the reservation from our govt.
please inform to our muslim brothers to utilize this kind of oppertunities.
Please send the appliation before 27 th july 2009. i.e coming monday. Please pass to our brothers.
For more details look into the attachments and http://www.tn. gov.in/tnusrb/
Jajakallah hir

Wednesday, July 22, 2009

comment

Aslammu alikkum
Dear all I convey my salaam to our EGD Brothers & Friends through this opportunity.Thank you for all of you to take serious effort to create this website. It is really help us to elanthangudi friends to know the current situation & events about in elanthangudi. It is a connecting between elanthangudi brothers & friends those who are stay in abroad.
Kind Regards
O.Sabeer Ahamed
050 7854765
sabeeahamed@gmail.com

Saturday, July 18, 2009

திருமணம்

Assalamu alaikkum
MR & MRS. PM.ABDUL AZEEZ.
Elanthangudi,
MR & MRS. D.RAJMOHAMED.
Thiruvidamaruthur,

MARRIAGE(NIKKAH)
A.AL RIYADH
with
R.NUSRATHUL RISWANA
SUNDAY 12TH JULY2009 at
MASJID RAHMATH
ELANTHANGUDI.

Thursday, July 16, 2009

comment

Aslammu alikkum

Elanthangudi website is really help to elanthangudi friends to know about current events in elanthangudi. It is a connecting bridge between elanthangudi friends those who are stay in abroad.

Thanks & Regards
Mubarak

mubarak_yem@yahoo.com

Monday, July 13, 2009

NISATH

Assalamu Alaikkum

Hi,my dear friends.

I am Nisath.

how are you friends.

This website is very usefull because any news in elanthangudi you view in http://elanthangudi.blogspot.com/

ellam pugalum ALLAH oruvanakk.

Saturday, July 11, 2009

சமுதாய செய்தி


த‌மிழ‌க‌ அர‌சின் சிறுபான்மையின‌ர் ந‌ல‌த்துறை வ‌ழ‌ங்கும் க‌ல்வி உத‌வித் தொகை
த‌மிழ‌க‌ அர‌சின் சிறுபான்மையின‌ர் ந‌ல‌த்துறை வ‌ழ‌ங்கும் க‌ல்வி உத‌வித் தொகை குறித்து தின‌த்த‌ந்தி நாளித‌ழில் வெளிவ‌ந்த‌ விப‌ர‌ம் இத்துட‌ன் இணைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.
இத‌னை ச‌முதாய‌ மாணாக்க‌ர்க‌ள் ப‌ய‌ன் பெறும் வ‌ண்ண‌ம் அந்த‌ந்த‌ ம‌ஹ‌ல்லா ஜ‌மாஅத் த‌க‌வல் ப‌ல‌கையில் இட‌ம்பெற‌ச் செய்ய‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.
Salam ,
Kindly find the attached file regarding scholarship which was published in Dailythanthi news paper on 11.07.2009 by TN govt.

Wednesday, July 8, 2009

அழைப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
உலகம் முழுவதும் உள்ள எலந்தங்குடி
மக்களை இணையத்தின் மூலம் ஒன்றீனைப்பதற்க்காக
இந்த இணையத்தை உருவாக்கிஉள்ளோம்.
இந்த அட்ரசை உலகமுழுவதும் உள்ள உங்கள் நண்பர்க்கும் மற்றும் உறவினர்கலுக்கும் தெரியபடுத்தவும்.
இதில் நான் மட்டும் ஆசிரியராக இல்லாமல் எல்லோரையும்
இதில் இனைத்து ஒவ்வொருவரையும் ஆசிரியராக
இனைக்க உள்ளோம். இதில் ஆசிரியராக
இனைய விருப்பம் உல்லவர்கள் உங்கள் E.MAIL ID
எனக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு;
இதில் நம் ஊர் சம்பதப்பட்ட செய்தி மற்றூம் நிகழ்ச்சிகளை தரவுள்ளோம்.இன்ஷா அல்லாஹ் விரைவில் எதிர்பார்க்கவும்
எலந்தங்குடி சம்பந்தப்பட்ட பழைய போட்டோ
உங்களீடம் இருந்தால் எனது e.mail க்கு அனுப்பிவைக்கவும்.

அன்புடன்
ஹஜ்ஜி முகம்மது

050-7544343
dubai

e mail; hajimohamed123@gmail.com

Sunday, June 28, 2009

hi
Assalmu Alaikkum .
How Are You All Elanthangudi Friends i Am Habib From Elanthangudi.
This Elanthangudi Speacial Web Site Can You Add Any Speacial News in this Website.
Habib Rahman
Umm Al QUWAIN.
U.A.E

habfar2006@yahoo.com


Thursday, June 25, 2009

அஸ்ஸலாமு அலைக்கும்

என் எலந்தங்குடி இனியவர்களே நம் ஊர் செய்திகளை நம்முடன் பகிர்ந்துகொள்ள இந்த இனையதளத்தை ஏற்படுத்தியுள்ளோம் என்பதை மகிழ்வோடு அறிவிக்கின்றோம்.இதில் காணும் Commend மூலமாக உங்கள் செய்திகளை தெரிவிக்கலாம் அல்லது கீழ்காணும் மின்அஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கலாம்.எவரையும் புண்படுத்தாத பொது செய்திகள் மட்டும் இந்த இனையத்தில் வெளியிடப்படும்.நம் ஊர் வெளிநாட்டுவாழ் நண்பர்களின் மின்அஞ்சல் விலாசம் அவர்கள் விருப்பத்திற்க்கு உட்பட்டு இந்த தளத்தில் வெளியிட விரும்புகிறோம்। விருப்பமுள்ளவர்கள் தங்களது முகவரிகளை அனுப்பினால் இனையத்தில் பதிவுசெய்ய காத்திருக்கிறோம.

இப்படிக்கு
உங்கள் அன்பு மறவாத

ஹஜ்ஜி முஹம்மது

மின்அஞ்சல் :
hajimohamed123@gmail.com

குறிப்பு; இதில் நீங்களும் ஆசிரியர் ஆகலாம்। விருப்பம் உள்ளவர்கள். எனது ஈமெயில் விலாசத்தில் தெரியவிக்கவும்.