அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எலந்தங்குடி இணையதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Monday, April 26, 2010

news

உலகின் இரண்டாவது உயரமான கட்டடம் சவுதி அரேபியாவில் உள்ள முஸ்லிம்களின் புனித இடமான மக்கா நகரத்தில் கட்டப்படுகிறது. முஸ்லிம்களின் புனித இடமாக உள்ள மஸ்ஜித் ஹரம் சரீப் அருகில் 662 மீட்டர் (2717 அடி) உயரம் கொண்ட கட்டடம் அந்நாட்டு அரசால் கட்டப்பட்டு வருகிறது.

உயர்ந்து வரும் உலகின் இரண்டாவது உயரமான கட்டடம்
உலகின் மிக உயரமான கட்டடம் புர்ஜ் கலிஃபா துபாயில் கடந்த சனவரியில் திறக்கப்பட்டது. இதுவரை உலகின் இரண்டாவது மிக உயர்ந்த கட்டடமாக தைவானில் உள்ள தாய்பேயில் 101 மாடிகளைக் கொண்ட 508 மீட்டர்(1676 அடி) கொண்ட கட்டடமே கருதப்பட்டு வந்தது.
மக்கா அரசு கோபுரம் (Makkah Royal Tower) என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கோபுரத்தின் உச்சியில் ஆறு கோபுர கடிகாரங்கள் பொறுத்தப்பட இருக்கிறது. செர்மனியில் தயாராகும் அந்த கடிகாரங்கள் உலகின் மிகப்பெரியதாக இருக்கும். 45 மீட்டர் அதாவது 147 அடி அகலமும், 43 மீட்டர் உயரமும் கொண்டதாக இருக்கும். இந்த கடிகாரங்களை இரவில் 17 கி.மீ தூரம் வரையிலும், பகலில் 12 முதல் 13 கி.மீ தூரம் வரையில் பார்க்க முடியும்.
சவுதி அரசால் கட்டப்பட்டுவரும் இந்தப் பிரமாண்டமான கட்டடத்திற்கான செலவு மூன்று பில்லியன் டாலர்களாகும். புனித பள்ளிகளின் கட்டுமானங்களைப் பராமரிக்கும் பொறுப்புகளை கொண்டிருக்கும் சவுதியின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனமான பின்லேடன் குழுமம் சவுதி அரசின் சார்பில் இக்கட்டடத்தையும் கட்டி வருகிறது.
இக்கட்டத்தில் ஏழு கோபுரங்களை கொண்ட விடுதிகளும் உண்டு. அதற்கு அப்ராஜ் அல் பேய்த் என்று பெயரிட்டப்பட்டுள்ளது. அந்த விடுதிகளில் 3000 அறைகள் உண்டு. முஸ்லிம்களின் தொழுகை திசையான ஹரம் சரீப் எனும் புனித பள்ளியை நோக்கிய வண்ணம் அதிகமான அறைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த வளாகத்தை பேர்மான்ட் விடுதி குழுமம் நிர்வகிக்கும். இஸ்லாமிய அறக்கட்டளை அல்லது வக்ஃப் இன் கீழ் இயங்கி இரண்டு புனித பள்ளிகளுக்கான பராமரிப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கு இதன் வருமானம் சென்றடையும்.
கட்டடத்தின் ஒரு பகுதி சூனில் திறக்கப்படுகிறது. கோபுரக்கடிகாரம் புனித மாதமான ரமதான் மாதத்தில் திறக்கப்படும். மேற்கண்ட தகவலை துபாயில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதன் நிர்வாகி முகம்மது அல் அற்கூபி தெரிவித்தார்.

Friday, April 23, 2010

hi, all FriendS Assalamu Alaikum Any message From ElanthanGudi Please send this email id hajimohamed123@mail.com
ASSALAMU ALAIKUM,

Tuesday, April 13, 2010

விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில் பாதை திறப்பதில் இழுபறி

விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில் பாதை திறப்பதில் இழுபறி
ஏப்ரல் 13,2010,00:00 IST

Front page news and headlines today

விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதை திறப்பு தாமதமாகி வருவதற்கு, இதை திறக்க அழைக் கப்பட உள்ள வி.ஐ.பி.,க் கள், சரியான தேதி கொடுக் காததே காரணம் என கூறப்படுகிறது. இப்பாதை இம்மாத இறுதியில் திறப்பதும் சந்தேகமே.


விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே 122 கி.மீ., தூரம் மீட்டர் கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றியமைக்கும் பணி முடிந்து, கடந்த மாதம் 18ம் தேதி ரயில்வே பாதுகாப்பு கமிஷனர், 120 கி.மீ., வேகத்தில் ரயில் இயக்கி சோதனை நடத்தினார்.பாதுகாப்பு சான்று வழங்கி 20 நாட்கள் ஆகியும், இன்னும் இப்பாதை திறக்கப்படவில்லை.இப்பாதை திறப்பு விழாவை வரும் 15ம் தேதி மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடத்தவும், மம்தா பானர்ஜியும், தமிழக முதல்வரும் வந்து பாதையை திறந்து வைக்கவும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் மூலம் கடந்த மாதம் அழைப்பு விடுக்கப் பட்டும், இன்னும் பதில் கிடைக்காததால், பாதை திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


கோடை காலத்தையொட்டி சென்னை எழும்பூரிலிருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில், வரும் ஜூன் மாதம் 5ம் தேதி வரை அனைத்து ரயில்களிலும் இரண்டாம் வகுப்பு (படுக்கை வசதி), 'ஏசி' மூன்றாம் வகுப்பு மற்றும் 'ஏசி' இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன.சில ரயில்களில், குறிப் பிட்ட சில தினங்களில் மட்டும் முதல் வகுப்பு 'ஏசி' டிக்கெட்டுகள் மிகக் குறைந்தளவே முன்பதிவு செய்யப்படாமல் உள்ளது.மயிலாடுதுறை - விழுப்புரம் பாதை விரைவாக திறக்கப்பட்டால், இப்பாதையில் முன்பு (மீட்டர் கேஜ் பாதையில்) இயக்கப்பட்ட ரயில்களுடன், முக்கிய நகரங்கள் இடையே சிறப்பு ரயில்களும் கூடுதலாக இயக்க வாய்ப்பு உள்ளது.இதனால், தென்மாவட்ட ரயில்களில் பயணிகள் நெருக்கடி ஓரளவுக்காவது குறைய வாய்ப்புள்ளது.


விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில் பாதை திறப்புக்கு அரசியல் காரணம் சொல்லி தள்ளி வைக் க்ஷகப்படும் நிலை தவிர்க்கப் பட, மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியும், தமிழக முதல்வரும் இனியும் தாமதிக்காமல் ரயில் பாதை திறப்பு விழாவுக்கு தேதி கொடுக்க வேண்டுமென, தென் மாவட்டங்களுக்கு அடிக்கடி பயணிக்கும் மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.


இப்பாதை திறப்பு தாமதம் குறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவரிடம் நேற்று கேட்ட போது, ''டில்லியிலிருந்து தற்போது வரை எந்த தகவலும் வரவில்லை. தெற்கு ரயில்வே பொது மேலாளர், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை ரயில்வே சாதனைகள் தொடர்பான அபூர்வ தபால் தலை கண்காட்சியை திறந்து வைக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது, இப்பாதை திறப்பு குறித்து பத்திரிகை நிருபர்களிடம் தெரிவிக்கவும் வாய்ப் புள்ளது,'' என்றும் தெரிவித்தார்.